Month: August 2025

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.…

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையையும் உறுதிப்படுத்த வேண்டிய…

புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்திருந்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்முகத் தேர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்முகத் தேர்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

அரசாங்கம் எந்தவொரு நாணயத்தையும் அச்சிடவில்லை!

தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 1.2…

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது- போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன

நாணயத்தாள் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த 2014…

தபால் வேலைநிறுத்தம் இன்றும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர்…

கல்முனை காதி நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை…

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – பொலிஸார் நீதிமன்றத்திற்கு விடுத்த அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு…

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை…

புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள்

புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா ஒரு படி மேலே சென்று மனிதப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும்…