கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

அதன்படி, நாளை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளும், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுலாகும்.

இந்த நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

By RifkaNF