வெலிகம பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைனும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் 18 வயதான மோல்டோவா நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
