மருந்துகளுக்கான விலை நிர்ணய சூத்திரம் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, ஒவ்வொரு வகை மருந்துகளுக்கும் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இதற்கிடையில், சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவையின் பெயர் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

By RifkaNF