இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான “வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரால் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்கப்பட்டன.
96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா” கப்பலானது, கட்டளை அதிகாரி அஷ்வினி குமாரினால் வழிநடத்தப்படுகிறது.
50 மீட்டர் நீளமான வேக ரோந்துக் கப்பலான “அதுல்யா” கப்பலானது, கட்டளை அதிகாரி அனித் குமார் மிஸ்ராவினால் வழிநடத்தப்படுகிறது.
இக்கப்பல்கள் இலங்கை கடலோர காவல்படையினருடனான பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை கடலோர காவல்படைகளுக்கு இடையிலான பல்துறைசார் ஊடாடல்களை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் ஒரு வாய்ப்பாக அமைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
