அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் பகுதியில் உள்ள ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
