தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். 

அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் பிரகாரம், நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. 

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச உப குழுவின் பிரதித் தலைவராகச் சேவையாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் கடமையாற்றியுள்ளார்.

By RifkaNF