பஹ்ரைனின் துல்லியமான மற்றும் முக்கிய தகவல்களை சேகரித்து, அதனை ஈரானிய புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனுக்கு எதிராக பயங்கரவாதச் சதித்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பயங்கரவாதக் ஆவணங்களை திரட்டிய குற்றச்சாட்டிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது நபர் ஒருவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

By RifkaNF