இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கைபேசிகளில் காணொளி எடுக்க முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
