சொபதனவியின் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைப்பு
கெரவலப்பிட்டியவின் சொபதனவி (LNG) மின் உற்பத்தி நிலையத்தின் 350 மெகாவோட் மின்சாரம் சற்றுமுன்னர் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரியவும், எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
