Month: February 2026

சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

போர் பதற்றம் – வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான…

மினாப் பாடசாலை மீதான தாக்குதல் – 53 பேர் பலி

தெற்கு ஈரானின் ஹோர்முஸ்கான் மாகாணத்திலுள்ள மினாப் நகரில், பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான IRNA வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த…

போர் பதற்றம் – விமான பயணங்கள் தொடர்பான அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது…

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை – அச்சப்பட வேண்டாம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச்…

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் – ஈரானில் 40 பேர் பலி

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே, இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட…

இந்தியா – இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்து – இலங்கை உறவு மேலும் வலுவடைந்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தாம் மனமுவந்து…

பாகிஸ்தான் தாக்குதல் – 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்பு

பாகிஸ்தான் தாக்குதல் – 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்புபாகிஸ்தானின் தாக்குதல்களில் இதுவரை 27 ஆப்கான் தலிபான் இராணுவ நிலைகளை அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் மொஸரப் சைடி தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் ஒன்பது ஆப்கான் இராணுவ நிலைகளை கைப்பற்றியுள்ளதாகவும்…

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி…

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார். இதன்போது குறித்த டிராக்டரின்…