Month: February 2026

இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்பு…

பங்களாதேஷில் இன்று பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

பங்களாதேஷில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால அரசாங்கத்தின் பின்னர் நடைபெறும் இத்தேர்தல் சர்வதேச அளவில்…

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ஊழியர் ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச்…

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித்…

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்…

சோமாலியாவில் கடற்கரையில் தரையிறங்கிய விமானம்!

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சோமாலிய பயணிகள் விமானம் ஒன்று, அந்நாட்டுத் தலைநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், விமானத்தில் பயணித்த 55 பேருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானியின்…

அகமதாபாத் – கொழும்பு நேரடி விமான சேவை: ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பம்!

இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது…

“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று ஆரம்பம்

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரதான சமூகப் பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது…

கனடாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம்…