இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இன்றைய இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி செயற்பட்டார்.
இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர் ஆசியக்கிண்ண தொடரில் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



