151வது உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
இன்று (09) 151வது உலக தபால் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
ஒரே நாளில் 47 இந்திய மீனவர்கள் கைது
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகள் இந்த மீனவர்களை கைது…
நல்லதண்ணி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு…
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக தேரர் உண்ணாவிரதம்
தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனாநாயக்க சிலைக்கு முன்பாக இன்று (08) பிற்பகல் 01.00 மணியளவில் ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது மற்றும்…
பெருந்தோட்ட சமூகத்திற்காக புதிய வீட்டுத் திட்டம்!
இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை 2027.12.31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தல் மற்றும் இடைக்கால வரவு செலவு சட்டகத்தில் அதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்காகபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த…
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த வாய்ப்பு
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…
யாழ். ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,…
காசா தொடர்பில் ஐ.நா வௌியிட்ட அதிர்ச்சி ரிபோர்ட்!
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.…
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க அதிவிசேட வர்த்தமானி
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி,…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன. இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 6.17 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகி இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில்…
