Category: உள் நாட்டு செய்திகள்

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான விசேட அறிவித்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை (27) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (27) அதிகாலை…

கெரவலப்பிட்டியவில் குப்பை மேடு ஒன்றில் தீப்பரவல்

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு…

கொழும்பு மாவட்ட காணி மதிப்பில் தொடரும் ஏற்றம்: 10.6% அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான…

14 வயது மாணவி துஷ்பிரயோகம்: உறவினர் கைது; காதலனுக்கு பொலிஸ் வலைவீச்சு!

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, அவர் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள்…

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு மார்ச் 18 ஆம் திகதி வரை…

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!

லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின்…

சுங்க அதிகாரிகள் இன்று முதல் கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க…

இரணைதீவில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை: 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் சுழியோடி (Diving) கடல் அட்டைகளை பிடித்த பத்து நபர்களுடன் 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை…

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய…