Category: உள் நாட்டு செய்திகள்

வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். காணி பிரச்சினைகள் தொடர்பாக…

எல்ல விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர் கௌரவிப்பு

எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது. பேருந்து விபத்து நடந்த நேரத்தில், கவிழ்ந்த பேருந்தில் முதலில் ஏறி காயமடைந்தவர்களை மீட்டவர் இராணுவ விசேட…

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத்…

பொலிஸ் விசேட நடவடிக்கையின் கீழ் 736 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைகள், பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும்…

திருகோணமலை கடற்பரப்பில் நேற்று நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்…

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

வவுனியா முதல் மஹாவ வரையிலான ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, ​​மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்பட்டது. இந்த மனுவை மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தின்…

புத்தளத்தில் 5 கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு

புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தடை செய்யப்பட்ட ஒருதொகை மீன்பிடி வலைகள் நேற்று முன்தினம் (17) அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத் துறை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட…

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து…

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு 200,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்…