Month: November 2025

குழந்தைகள் மத்தியில் தொற்றுநோய் அபாயம்: வைத்தியர் தீபால் எச்சரிக்கை

வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக குழந்தைகளிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக குழந்தை நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான குளிரான காலநிலையுடன் வயிற்றுப்போக்கு, குடற் காய்ச்சல், எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளூயன்ஸா உள்ளிட்ட நோய்கள்…

மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் காயமடைந்ததாக…

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கலயில் பூட்டு

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் 15 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். எனவே மாற்று வீதிகளை…

இந்தோனேசியாவிலும் சீரற்ற வானிலை: உயிரிழப்பு 303 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்

இந்தோனேசியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேரழிவு தரும் வெள்ளம் மற்றும்…

இன்று பி.ப. 3.00 மணி வரை கூரை மீதான சூரிய படலத்தை நிறுத்தி வைக்க பணிப்பு

இன்று பி.ப. 3.00 மணி வரை கூரை மீதான சூரிய படலத்தை நிறுத்தி வைக்குமாறு உரிமையாளர்களிடம் வேண்டுகோள்; மின்சார கட்டமைப்பில் குறைந்த கேள்வியே நிலவுவதாலும், அதனை சீராக பேண வேண்டியதாலும் இந்நடவடிக்கைக்கு தீர்மானம்

A/L உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை…

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச்…

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: மின்சார சபை அறிவிப்பு

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதன்…

மாவிலாறு அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பெடுத்துள்ளதால், மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு,…