Category: உள் நாட்டு செய்திகள்

இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி அதிரடி கைது!

வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) காதி நீதிமன்றம் மற்றும் பொலன்னறுவை (பதில்) காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (17) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின்…

டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடி

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத்…

வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பாவனை!

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில்…

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை கித்துல்உத்துவ 151ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது. இந்த விபத்தில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. காட்டு யானை ரயிலின்…

கட்டுநாயக்கவில் 12,000 சட்டவிரோத சிகரெட்டுகளுன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், விமான நிலையத்தின் வருகை தரும்…

கொழும்பில் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புகளில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது…

மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்

மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை…

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணிகள் இன்று (16) நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்திருந்தமையே இதற்குக் காரணமாகும். எவ்வாறாயினும்,…

நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திலேயே அந்தச் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதில் சுமார்…

இராணுவத்திடம் உள்ள காணிகள் ஏப்ரலில் மக்களுக்கு!

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக்…