Category: உள் நாட்டு செய்திகள்

தனியார் பஸ்ஸொன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயம்

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தானது, இன்று (12) அதிகாலை 3.40…

பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்து : தந்தை-மகன் பலி

பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்று படகில்…

தனியார் கல்வி நிலைய கிணற்றில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை முதல்…

மன்னாரில் மாபெரும் போராட்டம் – அரசியல் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.…

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு வேலிகளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார…

50 லட்சம் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது

அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த…

முல்லைத்தீவு இளைஞன் மரணம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை…

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த…

கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை…

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…