Category: உள் நாட்டு செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டுக்கு அருகில்: தொடரும் மழை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த…

தரமற்ற உருக்கு கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு முத்திரை!

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கே இவ்வாறு முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.…

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரதம்…

ரதுகலவுக்கு புதிய ஆதிவாசித் தலைவர் நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில எத்தன் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

சூதாட்டத்தில் தோற்ற நண்பருக்காக பாடசாலை மாணவர்கள் செய்த மோசடி!

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பலாங்கொடை பொலிஸ்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (08) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்,…

3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.2023, 2024 மற்றும்…

தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62 வது வயதில் காலமானார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக்…

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர் கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபராவார். பொலன்னறுவை தீப உயன அருகில்…