Month: August 2025

ரணிலை பார்க்க சஜித், மஹிந்த விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளனர். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி…

யாழில் உறக்கமின்மை காரணமாக மூதாட்டி தற்கொலை

உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும்…

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக…

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றிக் கொண்டு சிறைச்சாலை பேருந்து சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும்…

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானியில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது மற்றும் விசாரணை – முழு விபரம்

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு…

யாழ்ப்பாணம் – வீடொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு !

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 22 – யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றின் வளவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் மலசல கூடத்திற்கு குழி தோண்டியபோது சந்தேகத்திற்கு இடமான பொதியைக் கண்ட வீட்டின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல்…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம்

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால்…