Month: October 2025

அமெரிக்க நிர்வாக முடக்கம் தொடர்கிறது

அமெரிக்க அரச நிர்வாக முடக்கம் இரண்டாம் வாரத்திலும் நீடிக்கின்றது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகக் கட்சியினரின் பழைய…

இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும்…

லங்கா பிரிமியர் லீக்கில் இணையும் இந்திய வீரர்கள்!

இம்முறை இடம்பெறவுள்ள 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருபதுக்கு 20 வடிவமாக…

இன்று வானத்தில் தோன்றும் ‘சூப்பர் மூன்’

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினமான இன்று (6) வானில் காட்சியளிக்கவுள்ளது. வழமையாக வானில் தோன்றும் முழு நிலவை விட சுமார் 7% பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என்று ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப…

இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி…

பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு

பதுளை மாவட்டத்தை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, பசறை 13வது மைல்கல் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பாறைகள் விழுந்து வீதி தடைபட்டுள்ள நிலையில், தற்போதுள்ள ஆபத்து காரணமாக, ஒரு மருங்கை மாத்திரம் திறந்து வைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை…

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் நாளாந்தம் சேவையில்

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும்…

யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை!

சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கடல் அட்டைகள்

இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நேற்று (4) இரவு 250 கிலோகிராம் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு…

பேருந்துடன் லொறி மோதிய விபத்தில் மூவர் பலி

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த…