Month: October 2025

பெற்றோல் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த விலைத் திருத்தத்தின்படி, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாகக் கலந்துரையாடல்களை நடத்தி…

‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ – 971 சந்தேக நபர்கள் கைது

‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு…

யாழ் பல்கலை வளாகத்தில் 02 மெகசின்களும் ரி-56 துப்பாக்கி ஒன்றும் மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை…

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி

மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றுப்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. மும்பையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய…

நாளை வைத்தியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தம்

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள்…

பெருந்தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை (30) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ​சில அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் சொந்த நலனுக்காக பெருந்தோட்ட…

விஷ போதைப்பொருள் ஒழிப்புக்காக துரித தொலைபேசி இலக்கம்

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட…

இலங்கையின் 15வது சனத்தொகை கணக்கெடுப்பு: மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. “சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம்…

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்!

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விடுதலை கிடைக்க…