Month: November 2025

இலங்கைக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

நாளைய பொதுக் கூட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (21) நண்பகல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல்…

ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்!

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேட்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்…

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர்…

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு ஒரு மாத காலத்திற்கான…

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 13 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம் அருகே சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம்…

கடுவலையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான…

கட்டுநாயக்க வந்த 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்சோவிலிருந்து…

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் பாதையில் ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கிடையில் பெருமளவிலான மண் மற்றும் பாறைகள் சரிந்து ரயில் தடத்தை முற்றாக மூடியுள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும்…

திருகோணமலை சம்பவம் – அறிக்கை கோரிய ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த…