🎤 இசைத்துள்ளல் 2025 – நாட்டின் நடனத் திறமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வரலாற்று நிகழ்வு!

நடனக்கலைஞர்களுக்கான இலங்கையின் மிகப் பெரிய மேடையாக உருவெடுத்து வரும் இசைத்துள்ளல் 2025 நடனத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டது.

இந்த நிகழ்வு, கடந்த 24 ஆண்டுகளாக சுவிஸில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இசைத்துள்ளல் போட்டியின் தொடர்ச்சியாக, இம்முறை முதல் முறையாக இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.
சுவிஸ் கலைமன்றத்தினூடாக சோலோமூவீஸ் வழங்கும் இந்த நிகழ்வை, நிறுவனர் வசி முன்னெடுத்தார் .


🎯 யாழ்ப்பாணம் – முதல் தேர்வு சுற்று வெற்றிகரமாக நிறைவு

2025 ஜூன் 21 மற்றும் 22 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வில், மொத்தமாக 198 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய பிரபல நடன நெறியாள்கையாளர் ஷெரிப் மாஸ்டர், மற்றும் ஈழத்தின் திறமையான நடனாசிரியர்கள் அபிராமி, கிருஷ்ணகாந்தன் மாஸ்டர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

🌟 கொழும்பு – எதிர்வரும் 28ஆம் திகதி நடக்கவுள்ள தேர்வுத் திருவிழா

இசைத்துள்ளல் 2025 தொடரின் அடுத்த கட்டமாக, கொழும்பு ராயல் MAS அரீனாவில் தேர்வு 2025 ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்துள்ள போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

🏆 இறுதிப்போட்டி – யாழ்ப்பாணத்தில் வரலாற்று நிகழ்வாக!

இசைத்துள்ளல் 2025 நிகழ்வின் மாபெரும் இறுதிப்போட்டி, 2025 ஜூலை 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் மற்றும் கொழும்பில் தேர்வாகிய மிகுந்த திறமையுடன் கூடிய இறுதிப் போட்டியாளர்கள் இடையே இறுதிச் சமர் நடைபெறும்.

வெற்றியாளர்களுக்காக காத்திருக்கிறது:
• 💰 5 லட்சம் ரூபாய் ரொக்கம்
• ✈ சுவிஸ் நாட்டுக்கான பயண வாய்ப்பு

📢 தகவல் பெற வேண்டிய முகவர்கள்:

மேலும் விபரங்களுக்கு,
👉 SOLO MOVIES-இன் Instagram மற்றும் Facebook பக்கங்களை பார்வையிடலாம்.

இசைத்துள்ளல் 2025 – உங்கள் கண்ணிற்கு நடனவிருந்தை அனுபவிக்க தயாராகுங்கள்!

By dilli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *