காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, காலி – வக்வெல்ல வீதியூடான போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

காலி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

By RifkaNF