Category: உள் நாட்டு செய்திகள்

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய அடிப்படை தர பரிசோதனை

இலங்கை அரசாங்கம் நீண்ட தூர பேருந்துகள் அனைத்தையும் பயணத்துக்கு முன் கட்டாய அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்வரும் மாதம் (ஒக்டோபர் 2025) முதல் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து…

60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை பேருந்து நிலையம்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. புதுப்பித்தல் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 424 மில்லியன்…

4 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் சந்தேக நபர் நான்கு பேரை…

சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பம்

2025/26 பெரும் போகத்தில் இலங்கையில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையத்தளங்களில் இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தபால் சேவை நவீன மயமாக்கலுக்காக 2085 மில்லியன் ஒதுக்கீடு

தபால் சேவையின் எதிர்கால நவீனமயமாக்கலுக்காக இந்த ஆண்டு 2,085 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்…

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் இருந்து T-81 ரக…

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் தொடர்பில் விளக்கமளித்த பிரதியமைச்சர்

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் ஊடாக சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவும் அதிகாரம் வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் குறித்து விசேட விளக்கமளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சூதாட்டத்தால்…

எல்ல கோர விபத்தில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்தார். தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர்…

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம்…