Category: உள் நாட்டு செய்திகள்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திடீர் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக…

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை!

நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று…

நெஞ்சில் கத்திக்குத்து: பெண் கைது – யாழில் பயங்கரம்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின்…

நன்னடத்தைப் பிரிவில் உள்ள 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை

நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் நன்னடத்தைப் பொறுப்பில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனிப்பு இல்லாமை மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்த…

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக…

காத்தான்குடி சுற்றுலா வசதிகள் மேம்பாடு!

காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை மற்றும் அதனை அண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை இடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை,…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம்…

இறக்குமதி பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க தீர்மானம்

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி மூடல்

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மின் பிறப்பாக்கிகள், ஜனவரி 14 மற்றும் ஜனவரி 18 ஆம் திகதிகளில் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்படவுள்ளன. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த…