Category: விளையாட்டு செய்திகள்

இலங்கை மகளிர் அணி வெற்றி

மகளிருக்கான ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில்…

ஆசிய ரக்பி தொடரில் இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஏழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற இருந்தது. மழைக் காரணமாக குறித்த போட்டி இன்று காலை ஆரம்பமானது. இந்த போட்டியில்…

சமரி அத்தப்பத்துவுக்கு காயம்

மகளிர் உலக கிண்ணத் தொடரின் இன்றைய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து காயமடைந்துள்ளார். அவரது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியர்களின் ஆலோசனையின் படி மைதானத்தில் இருந்து வௌியேறினார். மகளிர் உலக…

லங்கா பிரிமியர் லீக்கில் இணையும் இந்திய வீரர்கள்!

இம்முறை இடம்பெறவுள்ள 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருபதுக்கு 20 வடிவமாக…

இலங்கை அணிக்கு புதிய 2 பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என…

இலங்கை – அவுஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இன்று (4) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பெய்த கடும் மழைக் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மகளிர் உலகக் கிண்ண தொடர்: முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதல்

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த தொடரானது நவம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர்…

பாகிஸ்தான் அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமானது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்…

ஆப்கானிஸ்தானின் 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அபராதம்

அபுதாபியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ண போட்டியின் போது, ​​ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அஹமட் மற்றும் முஜீப்பூர் ரஹ்மான் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கண்டிக்கப்பட்டுள்ளனர்.…

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மரணம்

முன்னாள் உலக குத்துச் சண்டை சம்பியனான ரிக்கி ஹாட்டன் தமது 46 வயதில் காலமானார். கிரேட்டர் மான்செஸ்டரின் டேம்சைடில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.…