Month: August 2025

மருதானை- கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகள் தாமதம்

தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையேயான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன. இன்று (21) மாலை 6:45 மணிக்கு மருதானையிலிருந்து காலிக்கு இயக்கப்படவிருந்த கடுகதி இரவு தபால்…

தானிய செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு காப்பீடு

பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உளுந்து,பச்சைப் பயறு, கௌப்பி,வேர்க்கடலை,குரக்கன், கொள்ளு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த சலுகை…

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அத தெரண வினவிய போதே, அந்த தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக பண்டார…

சிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, நிஷான் மதுசங்க, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம,…

காசாவில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா மீண்டும் அழைப்பு

காசாவில் உடனடியாக போரை நிறுத்துவதற்கும், அங்கு அமைதியை நிலை நாட்டுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கடலோரப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பாடசாலை செல்ல முடியாமல் 3வது ஆண்டையும் எதிர்கொள்வதாக அந்த நிறுவனம் தமது…

அரசாங்க நிதி பற்றிய குழு வழங்கியுள்ள அனுமதி

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் அண்மையில் (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு குழுவின் முன்மொழிவுகளுடன் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கணக்காய்வு சட்டத்தின்…

த.வெ.க கட்சியின் 2வது மாநாடு இன்று

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது தேசிய மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக…

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்காக மேலும் மூன்று மனுக்கள்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், அந்த சரத்தை சவாலுக்கு உட்படுத்தியும், உயர் நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த…

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

மேல் மாகாண நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.…