கூறினார்.
அதன்படி, குறித்த முடிவு செப்டம்பர் 1 முதல் அமுலுக்கு வரும்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை பேருந்துகள், அலுவலக சேவை போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பிற பேருந்துகளுக்கும் ஆசனப்பட்டிகளை பொருத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ரூ. சுமார் 2000 ரூபாய் செலவாகும் சீட் பெல்ட்களின் விலை தற்போது ரூ. 5000 முதல் 7000 வரை அதிகரித்துள்ளது என்றும், நுகர்வோர் விவகார ஆணைக்குழு இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட தூர சேவை பேருந்துகளில் ஆசனப்பட்டி அணிவதை எதிர்காலத்தில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவையான சட்ட திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் போது வாகனத்தின் நிலையை சரிபார்க்கும் முறையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாகனங்களின் சக்கரங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலை மற்றும் தரத்தில் இல்லாவிட்டால், அத்தகைய வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதி வழங்கப்படாது என்று அமைச்சர் அமைச்சின் ஆலோசனைக் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.