கொழும்பு கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் – இஷாரா செவ்வந்தி கைது
கொழும்பு நகரத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ்” என்ற பாதாள உலகத் தலைவரின் மரண வழக்கில், முக்கிய சந்தேக நபராக இருந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய இஷாரா…
📢. மன்னார் நானாட்டான் அரிப்பு வீதியினூடாக (B403) பிரயாணம் மேற்கொள்ளும் பிராணிகளின் கவனத்திற்கு!.
🚨. குறித்த வீதியினூடாக மழை காலத்தில் பிரயாணங்களை மேற்கொள்ளும் போது அருவி ஆற்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தில் வாகனங்களின் டயர்களில் வழுக்கும் தன்மை ஏற்படுத்துவதனால் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அவ்விடத்தில் மிகவும் அவதானமாக தங்கள் பிரயாணங்களை…
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது
தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் (14) கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில்…
முகமாலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் காணி ஒன்றில் இருந்து 40 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் (14) இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். நிலத்தை சாகுபடிக்கு தயார் செய்யும் போது காணி உரிமையாளர் குண்டுகளை கவனித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததாக…
மரக்கறி விலை வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன. இதனால்,…
பாடசாலை ஒன்றுக்கு அருகில் பெருந்தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டாக்கள் T-56 ரக துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி,…
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் மழையால் தாமதம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும், தொடர்ச்சியான மழையால் அகழாய்வுப் பணிகள் தாமதமடைந்துள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதவான்…
அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுக்க விசேட கூட்டம்
சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று ( 14 ) நடைபெறவுள்ளது. இந்த விசேட கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் செயலாளர்…
இலங்கை வரும் வௌிநாட்டினருக்கு நாளை முதல் ETA கட்டாயம்
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு…
கொழும்பு கட்டிடமொன்றில் தீ விபத்து
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து…
