Month: January 2026

தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து…

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய நடைமுறை

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும்…

தாழமுக்கம் வலுவிழக்கிறது; மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு,…

உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் நடைபெறவுள்ளன. குறித்த பரீட்சைகள் நாளை (12) முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

கல்வி அமைச்சருக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கும், கல்வி அமைச்சருக்கும் எதிர்ப்புத் தெரிவித்து “இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (10) பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன. மத்துகமையில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்பாகவே…

மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு; பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) மாலை 4.00 மணி முதல் நாளை (11)…

வீட்டைத் திருத்தும்போது அதிர்ச்சி; கூரைக்குள் தோட்டாக்கள்!

அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது, கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின்…

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது இன்று மாலையளவில் முல்லைத்தீவுக் கரையைக் கடக்கக் கூடும்…

ஊவாவிலும் வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த வாய்ப்பு

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09) பதுளை, ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, ஊவா மாகாண…

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானம் மீட்பு

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று (09) மாலை 6.00 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பாரந்தூக்கிகள் (Cranes) மூலம் இந்த…