இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கம்…

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி

ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமுமான லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அதிகாலை 3 மணியளவில் கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர். இந்நிலையில், கொல்கத்தாவின்…

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

“இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…

அனர்த்தத்தால் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க தீர்மானம்

“டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர…

மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த…

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி யாழில் பாரிய பேரணி

இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (12) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்னால்…

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை 2026 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார். இடர்…

பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத கால சலுகைக் காலம் வழங்கப்படும்…

முள்ளிக்குளம் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் – ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம்

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனையை வலுசக்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய்!

பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை ஜனாதிபதி…