தபால் வேலைநிறுத்தம் இன்றும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர்…

கல்முனை காதி நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை…

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – பொலிஸார் நீதிமன்றத்திற்கு விடுத்த அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு…

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை…

புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள்

புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா ஒரு படி மேலே சென்று மனிதப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும்…

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு…

கூலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 389 கோடி ரூபாய் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை லோகேஷ்…

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா, அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் இன்று (18) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…

வீதியில் கிடந்த பொதி- பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட…

ரஷ்ய – உக்ரைன் போரில் உலக சாதனை படைத்த உக்ரேனிய வீரர்!

ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார். 13,000 அடி (சுமார் 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷ்ய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள்…