யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த…
Miss Tourism Universe – 2025 பட்டம் வென்ற இலங்கையின் ஆதித்யா வெலிவத்தே
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற “Miss Tourism Universe – 2025” போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆதித்யா வெலிவத்தே, “Queen of the International Tourism” ஆக முடிசூட்டப்பட்டார். பட்டத்தை வென்ற அவர், இன்று (11) அதிகாலையில் 12.20 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து தாய்…
இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்
இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை…
கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை…
மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (10) இடம்பெறவுள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகளும்…
காசா ஆக்கிரமிப்பு இரு நாடு தீர்வுக்கான நம்பிக்கைகளை சிதைக்கும் என்று சஜித் எச்சரிக்கிறார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இஸ்ரேலின் காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டம், மோதலுக்கு இரு நாடு தீர்வுக்கான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை அழித்துவிடும் என்று எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காசாவை எடுத்துக் கொண்டால், அது வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல –…
முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை
முத்துஐயன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனவர் சடலமாக மீட்பு; விசாரணைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில்…
அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இலங்கை இளையோர் ரக்பி அணி
இன்று (09) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) அணியை 26-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்படி, இலங்கை அணி ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று,…
ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996…
